கல்லூரி மாணவி மாயம்

தா.பேட்டை, செப்.7: தா.பேட்டை அருகே தாத்தா வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வந்த மாணவி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி அருகே சின்னகொடுந்துறை பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் வாளவந்தி கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி இருந்து துறையூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கடந்த இரண்டு வருடமாக படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாத்தா ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை