கல்லூரி மாணவன் தற்கொலை

கூடுவாஞ்சேரி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மார்க்கிரண்ட் மாதுகார். இவரது, மகன் ஓம்பிரசாத் மார்க்கிரண்ட (18). பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி, பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் முதலாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை, ஓம்பிரசாத் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓம்பிரசாத், தனது காதலியை பார்ப்பதற்காக வல்லாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்துக்கு, ேநற்று முன்தினம் இரவு சென்றார். அங்கு, காதலியை பார்க்க முடியாததால், மனமுடைந்த அவர், 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்