கல்லூரி பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்றதால் மாணவர்கள்,ஆசிரியர்கள் பேருந்தை தள்ளி சென்றனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் கல்லூரி பேருந்து பழுதாகி பாதி வழியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த பேருந்தை தள்ளி சென்ற சம்பவம் வைரலாகிறது. கிருஷ்னகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மிட்டபள்ளி  என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கல்லூரியின் பேருந்து காவேரிப்பட்டணம் என்ற பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கு மாணவர்களையும் , ஆசிரியர்களையும் ஏற்றி கொண்டு சென்றது. அப்போது திம்மாபுறம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே பழுதாகி நின்ற பேருந்தை ஆசிரியர்களும் , மாணவர்களும் நடுரோட்டில் தள்ளி சென்றனர். சென்னை பெங்களூருக்கு இடையேயான இந்த தேசிய நெடுஞ்சாலையானது அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாகும் இந்த சாலையில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் கீழே இறங்கிவிட்டு பேருந்ததை தள்ள வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது….

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து