கல்லக்குடியில் விஷம் குடித்து தொழிலாளி பலி

லால்குடி, ஜூலை 31:கல்லக்குடியில் குடும்ப தகராறில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் கல்லக்குடி பொங்கியம்மாள் காலனியில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். அதிக குடிப்பழக்கம் உள்ள மணிகண்டன் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மணிகண்டன் வீட்டிலிருந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்