கலை கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு கவுன்சிலிங்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அரசு கலை கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, 12ம் வகுப்பு முடித்தவர்கள் அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகளில் சேர இந்தாண்டு ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி இசிஆர் சாலையில் அமைந்துள்ள அரசு கலை கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று கவுன்சிலிங் நடந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்கள், தாங்கள் விரும்பிய பாட பிரிவுகளை தேர்வு செய்தனர். அப்போது, கல்லூரி வளாகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இன்று இக்கல்லூரியில் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

முஸ்லிம் காவலர் தாடி வைக்க தடை இல்லை: மதுரை உயர் நீதிமன்றக் கிளை!