தஞ்சாவூர், ஜூன் 18: முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேற்று மதிய உணவு வழங்கினார். முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகர 48வது வட்ட திமுக சார்பில் திமுக மூத்த நிர்வாகி பால.சீத்தாராமன் ஏற்பாட்டில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நோயாளிகளின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 48-வது வட்ட செயலாளர் மெடிக்கல் ராஜா, நிர்வாகி சுதாகர், 48-வது வார்டு பிரதிநிதிகள் கென்னடி, சண்முகவடிவேல் 47-வது வார்டு பிரதிநிதிகள் நிமல், சொக்கு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோருக்கு உணவு
previous post