கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

ஈரோடு, ஜூன் 22:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை தவிர இதர பணிகளில் ஈடுபடுத்த கூடாது, செவிலியர்களை கணினி பதிவு செய்யும் பணிக்கு உட்படுத்துவதை கைவிட வேண்டும், ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பாலின பாகுபாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமை தாங்கினார். செயலாளர் வித்யாதேவி, பொருளாளர் தவ்ஹீத் ஆகியோர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை