கலக்கத்தில் கட்சி மாறிகள்

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின்போது மட்டுமின்றி தேர்தல்  தேதி அறிவிப்புக்கு பிறகும் தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு பெற்றிருந்த  சிலர் அதிரடியாக கட்சி மாறினர். தாங்கள் விரும்பிய தொகுதியில் போட்டியிட  வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர். ஆனால் தற்போது நிலைமை  தலைகீழாய் மாறும் நிலை இருப்பதால் கலக்கத்தில் உள்ளனர். தொகுதி  எண்ணிக்கை உடன்பாடே சில கூட்டணியில் இன்னும் முடிவாகாத நிலையில், எந்தெந்த  தொகுதிகள் என்பதிலும் பிரச்னை நீடிக்கிறது. இதனால் கடந்த 2 மாதத்தில்  புதுச்சேரியில் கட்சி மாறிய பிரபலங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.  தாங்கள் போய் சேர்ந்த கட்சியிலேயே எதிர்ப்பு கோஷ்டி போர்க்கொடி தூக்கி,  தொகுதியில் மாற்று நபரை களமிறக்க வேண்டுமென வலியுறுத்துவதால் பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி வைக்க அந்த தொகுதியை மாற்றுக் கட்சிக்கு தள்ளிவிடலாமா? என்ற  கணக்கையும் அரசியல் கட்சிகள் கையில் வைத்திருப்பதால் பதற்றத்தில் கட்சி  மாறிகள் புலம்புவதாக தகவல் உலாவுகின்றன….

Related posts

கர்நாடக அரசு முறையாக காவிரி நீரை திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு : வைகோ கண்டனம்

சொல்லிட்டாங்க…

கலைஞர் குறித்து விமர்சனம், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் பேச்சு சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும்: தலைவரின் கண் அசைவுக்காகத்தான் கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்; அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பு பேட்டி