கரூர், ஏப். 6: கரூர் மாநகராட்சி பகுதியில் தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்திய தேர்தல் ஆணையம் முதல்முறையாக 85 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாக்குரிமை செலுத்துவதற்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தே நேரடியாக மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாட்டினை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் அதிகாரி தங்கவேல் உத்தரவின் அடிப்படையில் கரூர் மாநகராட்சி கரூர் திருமா நிலையூர் பகுதியில் வீடு களுக்கு சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர்.