கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை

 

கரூர், ஜூன் 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இருந்து புதுத்தெரு, சர்ச் கார்னர் போன்ற பகுதிகளுக்கான சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. புதுத்தெருவின் வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகம் பயணித்து வருவதாலும், முறையற்ற நிலையில வாகனங்கள் குறுக்கே செல்வதாலும் ஒரு சில சமயங்களில் இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எனவே, புதுத்தெரு பகுதியில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிச் சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை