கரூர் பகுதியில் இன்று மின்தடை

கரூர், ஜூன் 13: கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கரூர் மின்விநியோக வட்டம், கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக புலியூர் ஏழுகண் பாலம் அருகில் உள்ள உயர் அழுத்த மின்பாதை அமைக்கவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக எஸ்.வெள்ளாளப்பட்டி பீடரில் இன்று ஜூன் 13ம்தேதி காலை 9மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர் ரோடு, தொழிற்பேட்டை, ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மேலப்பாளையம், சிட்கோ பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

இதே போல், லைட்ஹவுஸ் பீடரில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9மணி முதல் மாலை 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. கரூரில் திருவள்ளுவர் மைதானம், சிவா டெக்ஸ்டைல்ஸ், பாலாஜி வாட்டர் டேங்க், பழைய பைபாஸ் ரோடு, எஸ்பிஐ பேங்க், உழவர் சந்தை, லைட்ஹவுஸ் மக்கள் பாதை, மேட்டுத்தெரு, அண்ணா நகர், காந்திநகர், குமரன்பள்ளி மற்றும் சீனிவாசபுரம் பகுதியில் மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை