கரூர் எஸ்பி அலுவலக பிரிவு சாலையோரம்: கேட்வால்வு உடைந்து வீணாகும் குடிநீர்

கரூர், ஆக. 23: கரூர், தாந்தோணிமலை எஸ்பி அலுவலக பிரிவு சாலையோரம் கடந்த சில மாதங்களாக, குடிநீர் குழாய் கேட்வால்வில் சேதமடைந்து மாத கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் தாந்தோணிமலை சாலையில் மாவட்ட எஸ்பி அலுவலகம் மற்றும் அரசு பயணியர் மாளிகை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி குடிநீர் குழாய் கேட் வால்வில் நீர் கசிந்து கடந்த சில மாதங்களாக சாலையில் செல்கிறது.

இதனால் சாலையில் எந்நேரமும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் குடிநீரும் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, குழாய் இணைப்பை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை