அரியலூர், ஜூலை 16: அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வி வளர்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அரியலூர் அடுத்த கரு.பொய்யூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.