கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளை தமிழகத்திற்கு அதிகமாக வழங்க வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் ஊசி மற்றும் ஆக்சிஜன் சப்ளை அதிகரித்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கருப்பு பூஞ்சை தொற்று மாநிலம் முழுவதும் வேகமாக பரவுகிறது. இந்நோய்க்கான லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV ஊசி போன்ற மருந்து தமிழ்நாட்டில் தட்டுப்பாடு உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையை அணுகுவதற்கு லிபோசோமல் ஆம்போடெரிசின் பி IV மருந்தை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு