சென்னை: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் இயங்கி வருகிறது. இத்துறையின் பயிற்சி பிரிவின் கீழ் 7 மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணியாற்றி பணியிடை மரணமடைந்த 11 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று வழங்கினார்….