சேந்தமங்கலம், ஆக.8: கொல்லிமலை ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு, சீக்குப்பாறை பிரிவு பகுதியில் இருந்து, மவுன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர், வல்வில் ஓரி அரங்கம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கீதா, ஈஸ்வரன் தனசேகரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் நேரு, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலசுந்தரம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கனகராஜ், திமுக நிர்வாகிகள் இளங்கோ, பழனிசாமி, பெரியசாமி, சின்ன வெள்ளையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.