கருங்குழி பேரூர் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

 

மதுராந்தகம்: கருங்குழி பேரூர் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கருங்குழி பேரூர் திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் கருங்குழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கீதா சங்கர் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமினை பேரூராட்சி தலைவர் தசரதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகளை பெற்று சென்றனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் கண்புரை, பார்வை குறைபாடு, கண்ணில் நீர் வடிதல் உள்ளிட்ட சிகிச்சைக்கு ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை மருத்துவர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள், முன்னோடிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூர் திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யகோரி 4வது நாளாக வழக்கறிஞர் சங்கத்தினர் போராட்டம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு 15ம்தேதிவரை விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ₹659.32 கோடி கடன் வழங்க இலக்கு