கருங்கல் அருகே வாலிபர் விஷம் தின்று சாவு

கருங்கல், ஜூலை 9: கருங்கல் அருகே கப்பியறை பகுதியை சேர்ந்தவர் றோசம்மாள். அவரது மகன் ஜெகதீஷ் (39). அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகள் தனது அத்தை சுஜி வீட்டில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஜெகதீஷ் தனிமையில் வசித்து வந்தார். கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஜெகதீஷ் தென்னைக்கு வைக்கும் விஷ மாத்திரை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளியபடி ஆபத்தான நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

திருத்தணி அருகே சாயி லட்சுமி கணபதிக்கு 108 பால்குட அபிஷேகம்

மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் சடலங்களை விவசாய நிலத்தில் கொண்டு செல்லும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத் பகுதியில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்