கராத்தே போட்டி

ஆவடி, ஜூன் 25: ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டி சி.ஆர்.பி.எப் கூடைப்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் மாணவர்கள் கலந்துகொண்டனர். 8 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டு  போட்டியில் வெற்றி பெற்ற 32 மாணவர்களுக்கு மத்திய காவல்படை துணைத் தலைவர் தினகரன், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப் துணைத் தளபதி மிருத்தியுஞ்சய அண்ணா மற்றும் தேசிங்கு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தை கராத்தே சங்கச்செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு