கரடிபட்டி வேகத்தடை அருகே எரியாத எச்சரிக்கை சிகப்பு விளக்கை சீரமைக்க வேண்டும்

 

அரவக்குறிச்சி, மார்ச் 2: அரவக்குறிச்சி கரடிபட்டி வேகத்தடை அருகே எச்சரிக்கை சிகப்பு விளக்கு நீண்ட நாட்களாக எரிவதில்லை விபத்து ஏற்படுமுன் உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி கரடிபட்டியில் புறவழிச்சாலையும், கரூர் ரோடும் சந்திக்கும் இடத்தில் ஒரு வேகத் தடை உள்ளது. இதற்கு எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சாலையில் கரூர் அரவக்குறிச்சி, பள்ளபட்டி, திண்டுக்கல், தாராபுரம், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் ஏராளமான நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சந்திக்கும் இடத்தில் உள்ள வேகத் தடைக்கு எச்சரிக்கை செய்வதற்காக விட்டு விட்டு எரியும் வகையில் ஒரு சிகப்பு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நாட்களாக எரிவதில்லை.

இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தை குறைப்பது தெரியாமல் வந்து உடனடியாக பிரேக் அடிப்பதால் விபத்திற்குள்ளாகும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. அதுவும் இரவு நேரத்தில் டூ வீலரில் கடக்கும் இரண்டு பேராவது தினமும் விழுந்து அடிபடுகின்றனர். எனவே பெரும விபத்து ஏற்படும் முன்பு அரவக்குறிச்சி கரடிபட்டியில் வேகத்தடை அருகே எச்சரிக்கை சிகப்பு விளக்கை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை