Saturday, October 5, 2024
Home » கம்பம் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகள்-பறக்கும் தூசுகளால் விபத்து அபாயம்

கம்பம் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகள்-பறக்கும் தூசுகளால் விபத்து அபாயம்

by kannappan

கம்பம் : கம்பம் பகுதியில் தார்ப்பாய் மூடாமல் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. தேனி மாவட்டத்தில் 120க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவைகளிலிருந்து கல், ஜல்லி, எம்.சாண்ட் ஆகியற்றை டிப்பர் லாரிகள் மூலம் கம்பம் வழியாக கேரளாவுக்கு ஏற்றிச் செல்கின்றனர். இது தவிர சவடு மண் எடுக்கவும் தனியாருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இந்நிலையில், தேனி மாவட்டத்தை ஓட்டி உள்ள கேரளாவுக்கு தினசரி டிப்பர் லாரிகளில் இயற்கை வளங்கள் ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் லாரிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், யாரும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால், லாரிகளில் திறந்த நிலையில் கல், மண் ஆகியவறை எடுத்து செல்கின்றனர். காற்று அடிக்கும் போது லாரியிலிருந்து கிளம்பும் கல், மண் துகள் மற்றும் தூசிகள் அவைகளின் பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. இதனால், விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். …

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi