கம்பத்தில் விபத்தை தடுக்க வேகத்தடை

கம்பம்: கம்பம் நகரில் சிக்னல் பகுதி நான்குமுனை சந்திப்பில் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் நேற்று வேகத்தடை அமைத்தனர். கம்பம் நகரில் குமுளியில் இருந்து வரும் வாகனங்களும், கம்பத்தில் இருந்து குமுளி, தேனி செல்லும் வாகனங்களும், நகரில் உள்ள ஓடைக்கரைத்தெருவில் இருந்து பழைய பஸ்நிலையம் வழியாக நகரில் உள்ள நான்குமுனை சந்திப்பான சிக்னலை வந்தடைகின்றன. இந்த சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் பொருட்டு, பழைய பஸ்நிலைய சந்திப்பில், வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ ஞானபண்டிதநேரு தலைமையில் போலீசார் நான்குமுனை சந்திப்பில் நேற்று வேகத்தடை அமைத்தனர். இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது….

Related posts

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் உள்ளூர் வாகனத்துக்கு முழு கட்டண விலக்கு கிடையாது

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு