கன்னியாகுமரியில் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது

 

கன்னியாகுமரி, செப்.30: கன்னியாகுமரி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி எஸ்ஐ எட்வர்ட் பிரைட்க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது கன்னியாகுமரி வீயூ பாய்ண்ட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடையில் குட்கா விற்றதாக சாமிதோப்பு அருகே சாஸ்தான் கோவில்விளை பகுதியை சேர்ந்த சுசீலா (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.570 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் குமரி பெரியநாயகி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்றதாக அப்பகுதியை சேர்ந்த ஆனந்த் மனைவி கேத்தரின் டிரினிட்டா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,420 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி