வேலூர்: வரதட்சணையாக 100 சவரன் நகை கேட்டு கனடாவில் மனைவியை தவிக்கவிட்ட கணவன் உட்பட 4 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் அரியூரை சேர்ந்தவர் 29 வயது பட்டதாரி இளம்பெண். இவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான கமலேஷ்(31) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 35 சவரன் நகைகள் கொடுத்தார்களாம். திருமணம் நடந்த அன்றிரவு கமலேஷ், தனக்கு உடல்நலம் சரியில்லை, சில நாட்கள் கழித்து முதலிரவு வைத்துக்கொள்ளலாம் என கூறினாராம். சில நாட்கள் கழித்து கமலேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோரை அழைத்துக்கொண்டு கனடா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கும் மனைவியை படுக்கையறையில் தவிர்த்து வந்துள்ளார்.