கந்தர்வகோட்டை, பிப்.13: கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டவழங்கல் அலுவலர் உத்திராபதி தலைமை வகித்தார். இம்முகாமில் குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் நீக்குதல், சேர்த்தல், செல்போன் எண் சேர்த்தல் போன்ற பணிகள் உடனுக்குடன் செய்து வழங்கபட்டது. வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி கூறும்போது, மாதம்தோறும் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும். குடும்ப அட்டைதாரர்கள் இதில் கலந்து கொண்டு அவர்களது தேவைகளை உடனுக்குடன் செய்து பயன் அடையலாம் என்று தெரிவித்தார்.