கண்தான விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, செப்.6: திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பில், அன்னை தெரசா நினைவு தினத்தையொட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இப்பேரணியை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.

மருத்துவர் மகேஸ்வரன், செவிலியர் வசந்தாமணி முன்னிலை வகித்தனர். சுமார் 100 நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தட்டிகளை ஏந்திய படி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி