கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

தர்மபுரி, ஜூலை 7:அதிமான்கோட்டை அருகே உள்ள ஏ.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி புவனேஷ்வரி (19). இவர் கடந்த 4ம் தேதி செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதை கோவிந்தராஜ் கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த புவனேஷ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை