கணவன், மனைவி மாமியார், மருமகள் வெற்றி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் 9வது வார்டில் போட்டியிட்டார். திருப்புவனம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ள இவரது மனைவி வசந்தி சேங்கைமாறன், திருப்புவனம் 8வது வார்டில் போட்டியிட்டார். இருவரும் அமோக வெற்றி பெற்றனர். விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளில் வென்று திமுக கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றி உள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் 26வது வார்டில் மருமகள் சித்தேஸ்வரியும், 27வது வார்டில் மாமியார் பேபியும் போட்டியிட்டனர். 26வது வார்டில் மருமகள் சித்தேஸ்வரி 447 ஓட்டுகள் பெற்று, அதிமுக வேட்பாளரை விட 328 ஓட்டுகள் அதிகம் பெற்றும், 27வது வார்டில் மாமியார் பேபி 640 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 310 ஓட்டுகள் அதிகம் பெற்றும் வெற்றி பெற்றுள்ளனர். …

Related posts

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை