கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு: மனம் உடைந்த கர்ப்பிணி தற்கொலை

திருவனந்தபுரம்: கணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் மனம் உடைந்த 8 மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பாக்யா (21). அவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. தற்போது பாக்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் அபிலாஷுக்கு வேறு பல பெண்களுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. மது போதைக்கும் அடிமையாக இருந்து உள்ளார். இது பாக்யாவுக்கு கடும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று அவர் வீட்டு படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்ததும் பாங்கோடு போலீசார் விரைந்து சென்று பாக்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்