அரியலூர், ஏப்.21:கட்டுமான பணி நடப்பதால் அரியலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட் பேருந்து நிலையம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் அதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதியதாக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, பணிகள் முடியும் வரை இப்பேருந்து நிலையம் அரியலூர் புறவழிச்சாலையில், தனியார் மஹால் எதிர்புறம் தற்காலிகமாக இன்று முதல் (ஏப் 21ம்தேதி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.