கடை வியாபாரியை கொல்ல முயற்சித்த திருநங்கைகள் கைது

 

பாலக்காடு, மே 10: பாலக்காடு மாவட்டம் ஒலவக்கோட்டை அடுத்த வரித்தோட்டை சேர்ந்தவர் தனியார் கடை வியாபாரி செந்தில்குமார் (45). இவரை கடந்த 5ம் தேதி இரவு 10.30 மணியளவில் ஒலவக்கோடு தலைமை தபால் நிலையம் அருகே திருநங்கைகள் சிலர் கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டனர். காயமடைந்த செந்தில்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஹேமாம்பிகா நகர் போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொல்லம் சந்திப்பு ரயில் நிலையத்தில் கஞ்சிக்கோட்டையை சேர்ந்த திருநங்கை விருந்தா (25) போலீசார் கைது செய்யப்பட்டனர். இவருக்கு உதவிசெய்ததாக திருநங்கை ஜெ.ஜோமோள் (36) என்பவரை புதுச்சேரி கசபா போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி இன்ஸ்பெக்டர் சுஜித்குமார், எஸ்ஐக்கள் சுனில், ஷாஜூ ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை