கடையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உடும்பு மீட்பு

கடையம்,ஜூன் 27: கடையம் அருகே ஏ.பி. நாடானூர் கிராமத்தின் குமரன் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீர்தேக்கதொட்டியை சுத்தம் செய்வதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுத்துரை தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் சென்றனர். அப்போது தொட்டியின் உள்ளே உடும்பு ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இறங்கி உடும்பை பத்திரமாக மீட்டு சிவசைலம் பீட் வாளையார் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’