கடையம், செப்.13: நம் மூத்த தலைமுறையை சிறப்பிக்கும் விதமாய் கடையம் அருகே கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் கிராண்ட் பேரன்ஸ் டே தினம் கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஜோசப் லியாண்டர் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அனிதா வரவேற்றார். விழாவின் முக்கிய நிகழ்வாக மழலையர்கள் அவர்களது தாத்தாவுடன் கைகோர்த்து பயர்லெஸ், வயர்லெஸ் குக்கிங் வித் கிராண்ட் பா என்ற தலைப்பில் சமையல் போட்டியில் கலந்து கொண்டு விதவிதமான உணவுகளை தயார் செய்து அசத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயமும், தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைவர் ராபர்ட், செயலர் ஆனி மெட்டில்டா, பள்ளி முதல்வர் அமலா ஜூலியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.