கடைகளில் குட்கா விற்ற 24 பேர் கைது

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பர்கூர், கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, மத்திகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து 24 கடைகளில், ₹3,230 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை விற்பனை செய்த 24 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்