ராமநாதபுரம்: ராமநாதபுரம் மரைன் போலீஸ் போலீசார், வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தென்னந்தோப்பில் ₹50 லட்சம் மதிப்புள்ள 1,020 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை இலங்கைக்கு கடல் வழியாக இரவு வேளையில் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். …