கடலூர் சிறை காவலர் தற்கொலை

கடலூர்:  கடலூர் மத்திய சிறைக்கு அருகில் உள்ள பணியாளர்களுக்கான குடியிருப்பில் முதல்நிலை காவலர் செல்வகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மத்திய சிறையில் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பகல் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை டிஐஜி ஆய்வு செய்துவிட்டு சென்ற நிலையில், மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்த செல்வகுமார்(35) என்பவர், சிறைச்சாலைக்கு அருகில் உள்ள பணியாளர்களுக்கான குடியிருப்பில் அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்