கடற்கரை கிராமங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

 

ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் 10.6.2024 பிற்பகல் 5.30 மணி முதல் 12.6.2024 அன்று இரவு 11.30 மணி வரை கடலில் 2.7 மீட்டர் முதல் 3.0 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசப்படும் எனவும், இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரையோர கிராமங்களின் கடலில் அருகில் செல்லவோ, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கி குளிக்கவோ கூடாது. மேலும் 14.6.2024 வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் படகுகளை சேதம் அடையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை