கடந்த மாதம் வழங்கப்பட வேண்டிய பாமாயில், துவரம் பருப்பை ரேஷன் கடைகளில் பெறலாம்

திண்டுக்கல், ஜூலை 4: திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் ஜூன் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் இந்த மாதம் (ஜூலை) அவற்றை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என, கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை: திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ரேஷன் கடைகளில் பலரும் பெறாமல் உள்ளனர். அவற்றை பொதுமக்கள் இந்த மாதம் (ஜூலை) ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை