கஞ்சா விற்ற 3 பேர் கைது

வத்திராயிருப்பு, ஜன.19: கூமாபட்டியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வத்திராயிருப்பு அருகே கூமாபட்டியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி(31) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார்(20), ரமேஷ் (38) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதில் வைத்திருந்த 40 கிராம் கஞ்சாவையும் ரூ.32,700 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்