கஞ்சா விற்ற 3 பேர் கைது

மதுரை கரிமேடு போலீசார் நேற்று பெத்தானியபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த பெத்தானியபுரம் இ.பி.காலனியை சேர்ந்த ராகுல் டிராவிட்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 75 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல், அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அன்பு(22), இளங்கோ( 23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்