கஞ்சா விற்ற வாலிபர் கைது

ஈரோடு, செப்.19: பங்களாப்புதூர் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் வனத்துறை சோதனை சாவடி அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சத்தியமங்கலம், வடவள்ளி, முருகன்கோவில்மேடு பகுதியை சேர்நத கருப்பசாமி மகன் கவுரிசங்கர் (21) என்பவரை கைது செய்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்