கஞ்சா விற்ற பெண் உட்பட 2 பேர் கைது

 

திருப்பூர், மே 10: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். பவானி நகரில் சந்தேகத்திற்கிடாமாக பெண் ஒருவர் நின்றார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டனை சேர்ந்த வசந்தா (52) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல் அவிநாசி ரோடு பங்களாபஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மணிவண்ணன் (20) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி