கஞ்சா, குட்கா புழக்கத்தில் விடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வீ.வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் இளம் தலைமுறையினரை போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கையை சீரழித்து வரும் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை வேரோடு ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் எவ்வித தயக்கமும், அச்சமும் இல்லாமல் காவல் துறையை அணுகி அது பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட எஸ்பி யால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 6379 904848 என்ற பிரத்யோக தொலைபேசி எண்ணில்  தகவல் தெரிவிக்கலாம்.மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்கும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி புழக்கத்தை அறவே ஒழிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் மேற்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் மாவட்ட போலீஸ் எஸ்பி யின் பிரத்யோக எண் 6379904848 என்ற தொலைபேசி எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்பி வீ.வருண்குமார் தெரிவித்துள்ளார்….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு