சிவகங்கை, ஜூலை 21: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஒய்வூதியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10சதவீத ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும். மிழ் நாடு அரசுத்துறை பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வனக்காவலர் உள்ளிட்டோருக்கு ரூ.7850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தொடங்கி வைத்து பேசினார்.