ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் 70 சவரன், 1.50 லட்சம் கொள்ளை

சென்னை: சூளைமேடு ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம்(74). ஓய்வு பெற்ற மின்ஊழியரான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் குமாரராஜா குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். ஜோதி ராமலிங்கம் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மகன் வீட்டிற்கு சென்று ேபரக்குழந்தைகளை பார்த்து விட்டு ேநற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது. மேலும், வீடு முழுவதும் பொருட்கள் அனைத்து சிதறி கிடந்தது.புகாரின்படி சூளைமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து வீடுமுழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். …

Related posts

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை