சென்னை: சூளைமேடு ஜவஹர்லால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம்(74). ஓய்வு பெற்ற மின்ஊழியரான இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் குமாரராஜா குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். ஜோதி ராமலிங்கம் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் மகன் வீட்டிற்கு சென்று ேபரக்குழந்தைகளை பார்த்து விட்டு ேநற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் கதவை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள், ₹1.50 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது. மேலும், வீடு முழுவதும் பொருட்கள் அனைத்து சிதறி கிடந்தது.புகாரின்படி சூளைமேடு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து வீடுமுழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். …