செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் மிளகு, துவரம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். தக்காளியை வேகவைத்து அதில் அரைத்த பொடியைப் போட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர், வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வழக்கமான ரசம் போல் செய்யவும். பின்னர் அதனை இறக்கி ஓமவல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு 5 நிமிடம் மூடிவைத்துவிட்டு, சிறிது நேரம் கழித்து பரிமாறவும். ஓமவல்லி ரசம் தயார்.
…