கோவை, பொள்ளாச்சி கோட்டத்தில் கடந்த 5 ஆண்டில் 77 யானைகள் இறந்து விட்டன. யானை தாக்கி 82 பேர் இறந்துள்ளனர். 91 ேபர் காயமடைந்துள்ளனர். யானைகளால் ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி வருகின்றன. குறிப்பாக, சோளம், வாழை, தென்னை ஆகியவை அதிகமாக சேதமடைகின்றன. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வைத்த கோரிக்கையை அதிமுக ஆட்சி ஏற்கவில்லை. பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலுக்கு சென்ற 7 பேர் 5 ஆண்டில் யானை தாக்கி இறந்து விட்டனர். ஆனால், முள்ளங்காடு செக்போஸ்டில் இருந்து பூண்டி அடிவாரம் வரை அகழி அமைக்க இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. யானை தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற கூட அதிமுகவினர் எட்டி பார்க்கவில்லை. மனித உயிர்களை காக்க எந்த முயற்சியும் செய்யாமல், ஓட்டுக்காக மட்டுமே அதிமுகவினர் கிராம மக்களை தேடி கும்பிடு போட்டு வருகின்றனர். இது மக்கள் மத்தியில் எரிச்சலையும், ேகாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஓட்டுக்காக வரும் அதிமுகவினரை வாங்க பாத்துக்குறோம், இனி எத்தனை காலத்துக்கு எங்க உயிரோடு விளையாடுவீங்க என மக்கள் கொந்தளிப்புடன் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்….