ஓட்டல் பணியாளர் கார் மோதி பலி

 

வல்லம்: நாகப்பட்டினம் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் ஜீவன்ராஜ் (32). இவர், தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவன்ராஜ் செங்கிப்பட்டி- கந்தர்வக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் நோக்கி சென்ற கந்தர்வக்கோட்டையை சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவர் ஓட்டி வந்த கார் ஜீவன்ராஜ் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜீவன் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜீவன்ராஜின் மனைவி சீதாலட்சுமி புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related posts

குற்றங்கள் நிகழ்ந்தால் உடனே அழைக்கவும் போலீசார் ஆலோசனை

தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.5 லட்சத்தை கொடுக்க மறுப்பு ஆந்திரா சென்ற பரமக்குடி போலீஸ்

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை