காங்கயம், செப். 19: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரணம்பாளையம் பஞ்சாயத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பகலில் சிலர் வெளியூரில் இருந்து ஓட்டலில் மீதமான குப்பைகள் மற்றும் உணவு கழிவுகளை கொட்டுவதற்காக காரில் 4 பிளாஸ்டிக் கேன்களில் நிரப்பி எடுத்து வந்தனர். இந்த கழிவுகளை அங்கு கொட்ட முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காரை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் காரை சிறைபிடித்தனர்.